என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மார்கழி மாத பிறப்பு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
Byமாலை மலர்17 Dec 2020 3:08 AM GMT (Updated: 17 Dec 2020 3:08 AM GMT)
மார்கழி மாதப்பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. மார்கழி மாத பிறப்பையொட்டி இந்த கோவிலுக்கு நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. ஆதலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து இருந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். வனத்துறை கேட் காலை 6 மணிக்கு திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மாதப்பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த சிறப்பு பூஜையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதையடுத்து பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மாதப்பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த சிறப்பு பூஜையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X