என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் அருகில் புதிய மண்டபம் கட்ட பூமி பூஜை
Byமாலை மலர்11 Dec 2020 5:43 AM GMT (Updated: 11 Dec 2020 5:43 AM GMT)
ஸ்ரீகாளஹஸ்தி ராஜகோபுரம் கட்டுமானத்தின் போது அகற்றப்பட்ட தேவாங்குல மண்டபத்தை மீண்டும் அதே இடத்தில் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பழைய ராஜகோபுரம் 2015-ம் ஆண்டு மே மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பின்னர் புதிய ராஜகோபுரம் கட்டும்போது, அதன் அருகில் கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருந்த தேவாங்குல மண்டபத்தை அகற்றினர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உற்சவர்கள் வீதி உலா வரும்போது, வாகனச் சேவையை தேவாங்குல மண்டபத்தில் நிறுத்தி சிறப்புப்பூஜைகள் செய்து, பின்னர் 4 மாடவீதிகளில் உலா வருவது வழக்கம்.
புதிய ராஜகோபுரம் கட்டுமானத்தின் போது அகற்றப்பட்ட தேவாங்குல மண்டபத்தை மீண்டும் அதே இடத்தில் கட்ட நேற்று பூமி பூஜை போடப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்று தேவாங்குல மண்டபம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்து, புதிய மண்டபத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். பூமி பூஜையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்திராஜு மற்றும் அதிகாரிகள், தேவாங்குல சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X