என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தங்கத் தேர் செய்யும் பணி தொடக்கம்
Byமாலை மலர்10 Dec 2020 6:09 AM GMT (Updated: 10 Dec 2020 6:09 AM GMT)
வில்லியனூரில் பிரசித்திப்பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் செய்யும் பணி இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கப்படுகிறது.
வில்லியனூரில் பிரசித்திப்பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கோவில் திருவிழாக் காலங்களில் உள்பிரகாரத்தில் வலம்வரும் வகையில் தங்கத்தேர் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து தேர் செய்யும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கப்படுகிறது.
தொகுதி எம்.எல்.ஏ.வும், பொதுப் பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தேர் செய்யும் பணியை தொடங்கி வைக்கிறார். 75-வது பட்டம் வர்தமான் சீனிவாச ராமானுஜ ஆச்சாரியார் சுவாமிகள் கலந்துகொண்டு மங்களா சாசனம் செய்துவைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அத்தியூரான் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் கோவில் சிறப்பு அதிகாரி, அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X