search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவிலுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்
    X
    பழனி முருகன் கோவிலுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்

    பழனி முருகன் கோவிலுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்

    பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாரவிடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
    பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாரவிடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்காக படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதேபோல் திருஆவினன்குடி கோவிலிலும் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் குவிந்ததால் பழனி பூங்காரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழனி மலைக்கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
    Next Story
    ×