என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி
Byமாலை மலர்3 Dec 2020 4:47 AM GMT (Updated: 3 Dec 2020 4:47 AM GMT)
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில், கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே பிரதானமான தெய்வம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில், கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. ஆலமரத்தை தலவிருட்சமாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப்போல பொற்றாமரைக் குளத்தையும் கொண்டு அமைந்திருக்கும் சிறப்புமிக்க ஆலயமாக இது திகழ்கிறது.
பக்தர்கள் இந்த மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் குரு தட்சிணாமூர்த்தி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதியின் முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே பிரதானமான தெய்வம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள்.
வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1- 2 மணி), இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மதுரையில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கிலோமீட்டர் தொலை விலும் திருப்பத்தூர் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரம் சென்றால் பட்டமங்கலம் ஊரை அடையலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X