search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவிலில் சகஸ்ரதீபம் ஏற்றி வழிபாடு
    X
    ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவிலில் சகஸ்ரதீபம் ஏற்றி வழிபாடு

    ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவிலில் சகஸ்ரதீபம் ஏற்றி வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபக்கோவிலான காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் சகஸ்ர தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
    கார்த்திகை மாதம் என்றாலே விளக்குகள் ஏற்றி வழிபடுவது ஐதீகம். குறிப்பாக வைணவக் கோவில்களில் இம்மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ரதீப வழிபாடு நடைபெறும். இதனால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இவ்வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபக்கோவிலான காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் நேற்று மாலை சகஸ்ரதீப வழிபாடு நடந்தது. சகஸ்ர தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
    Next Story
    ×