என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தேசூர் சிவசுப்பிரமணியசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
Byமாலை மலர்18 Nov 2020 5:43 AM GMT (Updated: 18 Nov 2020 5:43 AM GMT)
தேசூர் பேரூராட்சி அய்யாசாமி தெருவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது
தேசூர் பேரூராட்சி அய்யாசாமி தெருவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. முன்னதாக வள்ளி தெய்வானை, சிவசுப்பிரமணியர், தூண்டுக விநாயகர், அங்காள பரமேஸ்வரி ஆகிய மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து நவக்கிரகங்களுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனர். பின்னர் குருபகவானுக்கு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து, எலுமிச்சை மற்றும் பண மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயிற்சியாகும் குருபகவானுக்கு பல்வேறு பிரசாதங்கள் வைத்து படையல் செய்து, கற்பூர ஆராதனை நடந்தது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் நிர்வாகி டி.எஸ்.சிவா, பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்.
இதில் செய்யாறு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் பாஸ்கரன், அர்ச்சனா உள்பட பலர் கலந்துகொண்டனர். வருகிற 21-ந்தேதி வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. தினமும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து நவக்கிரகங்களுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனர். பின்னர் குருபகவானுக்கு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து, எலுமிச்சை மற்றும் பண மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயிற்சியாகும் குருபகவானுக்கு பல்வேறு பிரசாதங்கள் வைத்து படையல் செய்து, கற்பூர ஆராதனை நடந்தது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் நிர்வாகி டி.எஸ்.சிவா, பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்.
இதில் செய்யாறு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் பாஸ்கரன், அர்ச்சனா உள்பட பலர் கலந்துகொண்டனர். வருகிற 21-ந்தேதி வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. தினமும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X