search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
    X
    மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

    மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆறாட்டு விழா நடத்த கோரிக்கை

    மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறாட்டு விழா நடத்த வேண்டும் என கலெக்டரிடம், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சாய்ராம் மனு கொடுத்துள்ளார்.
    குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் முக்கியமானது மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவில். இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று.

    இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழா தொடர்ந்து நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். தினமும் கோவிலில் பூஜைகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் கலந்து கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    கந்தசஷ்டி விழாவின் 6-வது நாள் சூரசம்ஹாரம் முடிந்து, 10-வது நாள் சுப்பிரமணியசாமி மயிலாடியில் அமைந்துள்ள தீர்த்தவாரி மடத்தில் எழுந்தருளுவார். அப்போது அங்குள்ள புத்தநாரு கால்வாயில் சுவாமிக்கு ஆறாட்டு வைபவம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆறாட்டு விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதை போன்று இந்த ஆண்டும் ஆறாட்டு விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று மயிலாடி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சாய்ராம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளார்.
    Next Story
    ×