என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெங்களூரு கலாசி பாளையாவில் உள்ள ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்16 Nov 2020 9:02 AM GMT (Updated: 16 Nov 2020 9:02 AM GMT)
பெங்களூரு கலாசி பாளையாவில் உள்ள ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா இன்று(திங்கட்கிழமை) தொடங்கி வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை நடக்கிறது.
பெங்களூரு கலாசிபாளையாவில் ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில்(ஆங்கிலத்தில் நவம்பர் மாதம்) இந்த கோவிலில் திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா இன்று(திங்கட்கிழமை) தொடங்கி வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலில் ஐயப்பன் பஜனை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம்(டிசம்பர்) 26-ந் தேதி நடக்கிறது. முன்னதாக ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.
ஜனவரி மாதம் 14-ந் தேதி அன்று காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடக்கின்றன. அப்போது பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட இருக்கிறது. பின்னர் சபரிமலையில் மகர ஜோதி ஏற்றப்படும் நேரத்தில் இந்த கோவிலில் மகர சங்கராந்தி கற்பூர திவ்ய ஜோதி பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குருசாமி குமாரசாமி தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் செய்துள்ளனர்.
ஜனவரி மாதம் 14-ந் தேதி அன்று காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடக்கின்றன. அப்போது பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட இருக்கிறது. பின்னர் சபரிமலையில் மகர ஜோதி ஏற்றப்படும் நேரத்தில் இந்த கோவிலில் மகர சங்கராந்தி கற்பூர திவ்ய ஜோதி பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குருசாமி குமாரசாமி தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X