என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஐப்பசி திருவிழா: நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்
Byமாலை மலர்11 Nov 2020 3:12 AM GMT (Updated: 11 Nov 2020 3:12 AM GMT)
நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி, நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில், 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இதில் ஆனி தேரோட்டம், ஆடிப்பூர வளைகாப்பு, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆகியவை சிறப்பு பெற்றது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல கட்டுப்பாடுகளுடன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.
இந்த நிலையில், நேற்று தபசுக்காட்சி நடைபெற்றது. இதையொட்டி, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தங்கச்சப்பரத்தில் டவுன் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் பகல் 11 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு காட்சி அளித்தார். பின்னர், நெல்லையப்பருக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சுவாமி- அம்பாள், நெல்லை கோவிந்தர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது. பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானப்பால் ஊட்டும் வைபவம் நடந்தது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் இணையத்தின் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல கட்டுப்பாடுகளுடன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.
இந்த நிலையில், நேற்று தபசுக்காட்சி நடைபெற்றது. இதையொட்டி, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தங்கச்சப்பரத்தில் டவுன் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் பகல் 11 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு காட்சி அளித்தார். பின்னர், நெல்லையப்பருக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சுவாமி- அம்பாள், நெல்லை கோவிந்தர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது. பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானப்பால் ஊட்டும் வைபவம் நடந்தது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் இணையத்தின் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X