என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மயிலாடுதுறை காவிரிக்கரையில் ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரி
Byமாலை மலர்19 Oct 2020 4:27 AM GMT (Updated: 19 Oct 2020 4:27 AM GMT)
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி புறப்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளதால் காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து அஸ்திரதேவர்கள் மட்டும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறையில் துலா உற்சவ முதல்நாள் தீர்த்தவாரி அஸ்திரதேவர் மட்டுமே காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கங்கை முதலான புன்னிய நதிகள் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் சாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர், அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர், காசிவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.
இதில் முதல்நாள் தீர்த்தவாரி, அமாவாசை தீர்த்தவாரி மற்றும் கடைசி 10 நாள் உற்சவத்தில் நான்கு கோவில்களில் இருந்து சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளோடு காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம்கொடுப்பது வழக்கம். பிரசித்திபெற்ற துலா உற்சவம் நேற்று தொடங்கியது.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி புறப்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளதால் முதல்நாள் தீர்த்தவாரி உற்சவத்திற்கு மாயூரநாதர்கோவில், வதானேஸ்வரர்கோவில், அய்யாறப்பர்கோவில், காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து அஸ்திரதேவர்கள் மட்டும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி பகல் 1.30 மணியளவில் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் சாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர், அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர், காசிவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.
இதில் முதல்நாள் தீர்த்தவாரி, அமாவாசை தீர்த்தவாரி மற்றும் கடைசி 10 நாள் உற்சவத்தில் நான்கு கோவில்களில் இருந்து சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளோடு காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம்கொடுப்பது வழக்கம். பிரசித்திபெற்ற துலா உற்சவம் நேற்று தொடங்கியது.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி புறப்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளதால் முதல்நாள் தீர்த்தவாரி உற்சவத்திற்கு மாயூரநாதர்கோவில், வதானேஸ்வரர்கோவில், அய்யாறப்பர்கோவில், காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து அஸ்திரதேவர்கள் மட்டும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி பகல் 1.30 மணியளவில் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X