என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கொரோனா தொற்று காரணமாக திருப்பராய்த்துறையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி ரத்து
Byமாலை மலர்15 Oct 2020 6:29 AM GMT (Updated: 15 Oct 2020 6:29 AM GMT)
திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் கோவிலில் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி முதல் நாள் துலாஸ்நானம் எனப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
ஐப்பசி மாதம் கடைசியில் மயிலாடுதுறையில் கடைமுழுக்கு நடைபெறும். ஐப்பசி முதல் நாளன்று நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அங்குள்ள அகண்ட காவிரி ஆற்றில் துலாஸ்நானம் என்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று கோவில் தக்கார் விஜய், செயல் அதிகாரி ஹேமாவதி ஆகியோர் தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாதம் கடைசியில் மயிலாடுதுறையில் கடைமுழுக்கு நடைபெறும். ஐப்பசி முதல் நாளன்று நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அங்குள்ள அகண்ட காவிரி ஆற்றில் துலாஸ்நானம் என்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று கோவில் தக்கார் விஜய், செயல் அதிகாரி ஹேமாவதி ஆகியோர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X