search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X
    பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கார், வேன்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை நாளான நேற்று, பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே, சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் படையெடுத்தனர். மலைக்கோவிலுக்கு செல்வதற்காக படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதேபோல் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்நிலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்கள் வாகனங்களை கிழக்கு கிரிவீதி, மேற்கு கிரிவீதி அருகே உள்ள பஸ்நிலையங்களில் நிறுத்தினர். இதனால் பூங்காரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் படையெடுப்பதால், ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×