என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
Byமாலை மலர்10 Oct 2020 5:49 AM GMT (Updated: 10 Oct 2020 5:49 AM GMT)
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபட்டனர்.
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பு அருகில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பாகவே மாமன்னன் ராஜராஜசோழன் இந்த கோவிலை கட்டி உள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இங்கு உள்ள மூலவரான 5½ அடி உயரமுள்ள சிவலிங்க சிலை குமரி மாவட்டத்திலேயே மிகவும் உயரமானது ஆகும். பிரசித்தி பெற்ற இந்த தலத்தில் குகன் என்ற முருக கடவுள், சிவன் என்ற ஈஸ்வரனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்ற பெயர் வர காரணமாயிற்று.
இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரமான நேற்று 1,008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் கணபதி ஹோமமும், மிருத்திஞ்சய ஹோமமும் நடந்தது. பின்னர் சுவாமிக்கு தீபாராதானை, கும்ப பூஜை, சகஸ்ரநாம அஸ்டோத்திர சங்கு பூஜை நடந்தது. அப்போது சிவலிங்கம் வடிவில் 1,008 சங்குகள் வைக்கப்பட்டு அதில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை தந்திரி கே.ஜி.எஸ்.மணிநம்பியார், சங்கர் சிவாச்சாரியார், கோவில் தலைமை அர்ச்சகர் ராஜாமணி, அர்ச்சகர் ராஜா ஆகியோர் நடத்தினார்கள்.
அதன் பிறகு மூலவரான குகநாதீஸ்வரருக்கு 1,008 சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் நடராஜரும், சிவகாமி அம்பாளும் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை தலைவர் எம்.கோபி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.
இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரமான நேற்று 1,008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் கணபதி ஹோமமும், மிருத்திஞ்சய ஹோமமும் நடந்தது. பின்னர் சுவாமிக்கு தீபாராதானை, கும்ப பூஜை, சகஸ்ரநாம அஸ்டோத்திர சங்கு பூஜை நடந்தது. அப்போது சிவலிங்கம் வடிவில் 1,008 சங்குகள் வைக்கப்பட்டு அதில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை தந்திரி கே.ஜி.எஸ்.மணிநம்பியார், சங்கர் சிவாச்சாரியார், கோவில் தலைமை அர்ச்சகர் ராஜாமணி, அர்ச்சகர் ராஜா ஆகியோர் நடத்தினார்கள்.
அதன் பிறகு மூலவரான குகநாதீஸ்வரருக்கு 1,008 சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் நடராஜரும், சிவகாமி அம்பாளும் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை தலைவர் எம்.கோபி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X