என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கடலூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
Byமாலை மலர்28 Sep 2020 3:33 AM GMT (Updated: 28 Sep 2020 3:33 AM GMT)
கடலூர் புதுக்குப்பத்தில் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கஜேந்திர வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடலூர் புதுக்குப்பத்தில் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து 24-ந் தேதி யாக சாலை ஹோமம் மற்றும் திருமஞ்சனமும் நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கஜேந்திர வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு புரட்டாசி திருவோண கருடசேவையும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 1008 சகஸ்ரநாம அர்ச்சனையும், ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
இதையடுத்து 24-ந் தேதி யாக சாலை ஹோமம் மற்றும் திருமஞ்சனமும் நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கஜேந்திர வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு புரட்டாசி திருவோண கருடசேவையும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 1008 சகஸ்ரநாம அர்ச்சனையும், ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X