search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
    X
    வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி

    கடலூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

    கடலூர் புதுக்குப்பத்தில் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கஜேந்திர வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    கடலூர் புதுக்குப்பத்தில் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து 24-ந் தேதி யாக சாலை ஹோமம் மற்றும் திருமஞ்சனமும் நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கஜேந்திர வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு புரட்டாசி திருவோண கருடசேவையும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 1008 சகஸ்ரநாம அர்ச்சனையும், ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×