
முன்னதாக திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர் நம்பிசுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தார். தற்போது கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசின் விதிமுறைகளை பின்பற்றி உறியடி திருவிழா நடத்தப்பட்டது.
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. வனத்துறை சோதனை சாவடியில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு, கைகளில் சானிடைசர் வழங்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கோவிலில் அர்ச்சனை செய்யவும், பிரசாதங்கள் வழங்கவும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ உத்தரவின்படி, வனசரகர் பாலாஜி தலைமையில் வனத்துறை ஊழியர்களும், திருக்குறுங்குடி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.