search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் பாஞ்சராத்திர ஜெயந்தி
    X
    பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் பாஞ்சராத்திர ஜெயந்தி

    பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் பாஞ்சராத்திர ஜெயந்தி

    பண்ருட்டி காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் பாஞ்சராத்திர ஜெயந்தி மற்றும் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.
    பண்ருட்டி காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பாஞ்சராத்திர ஜெயந்தி மற்றும் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி வரதராஜபெருமாள் மற்றும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக, ஆராதனைகளுடன் சாமி புறப்பாடு நிகழ்ச்சியும், விசேஷ திருமஞ்சனமும் நடந்தது. அதன் பிறகு சாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதோடு, கோவில் குளம் அருகே உறியடி உற்சவம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பண்ருட்டி யாதவ பண்பாட்டு சங்க தலைவர் முத்துப்பிள்ளை, வெங்கடாஜலபதி, மணி, நாராயணன், பாஸ்கர், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×