என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜெனகை மாரியம்மன் கோவில் திருப்பணி
Byமாலை மலர்8 Sep 2020 7:44 AM GMT (Updated: 8 Sep 2020 7:44 AM GMT)
ஜெனகை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு கடந்த ஆண்டு பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு அண்டை மாநிலத்தில் இருந்தும் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் அம்மனை தரிசிக்க வருவார்கள். இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு கடந்த ஆண்டு பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் கோவிலுக்கு வருகை புரிந்தார்.
அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். கோவில் செயல் அலுவலர் சத்யநாராயணன், ஆலய பணியாளர்கள் பூபதி, வசந்த் ஆகியோர் கோவிலில் நடைபெற்ற திருப்பணி வேலைகளை எடுத்துக் கூறினர். அப்போது மாணிக்கம் எம்.எல்.ஏ. பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபத்தின் இருபுறமும் மண்டபங்கள் கட்ட வேண்டும்.
அர்த்தமண்டபத்தில் குளிர்சாதன வசதி ஏற்படுத்த வேண்டும். ராஜகோபுரம் முன்பாக பக்தர்கள் இளைப்பாற தகரசீட்டு அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், நகர செயலாளர் கொரியர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். கோவில் செயல் அலுவலர் சத்யநாராயணன், ஆலய பணியாளர்கள் பூபதி, வசந்த் ஆகியோர் கோவிலில் நடைபெற்ற திருப்பணி வேலைகளை எடுத்துக் கூறினர். அப்போது மாணிக்கம் எம்.எல்.ஏ. பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபத்தின் இருபுறமும் மண்டபங்கள் கட்ட வேண்டும்.
அர்த்தமண்டபத்தில் குளிர்சாதன வசதி ஏற்படுத்த வேண்டும். ராஜகோபுரம் முன்பாக பக்தர்கள் இளைப்பாற தகரசீட்டு அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், நகர செயலாளர் கொரியர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X