என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி முருகன் கோவிலுக்கு அபிஷேக தீர்த்தம் கொண்டு வருவதில் சிரமம்
Byமாலை மலர்8 Sep 2020 6:14 AM GMT (Updated: 8 Sep 2020 6:14 AM GMT)
பழனியில் மழை பெய்து வருவதால் இந்த பாதையானது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே தீர்த்தம் எடுத்து வருவதில் கடும் சிரமம் உள்ளதாக மிராஸ் பண்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பழனி முருகன் கோவிலில் மூலவருக்கு தினமும் 6 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு ஒவ்வொரு கால பூஜைக்கும் தேவையான அபிஷேக தீர்த்தத்தை பழனி கோவில் 64 மிராஸ் பண்டாரங்கள் தினமும் எடுத்து வருகின்றனர். இதற்காக இவர்கள், சிவகிரிப்பட்டி மருத்துவநகர் அருகே உள்ள வரட்டாறு நந்தவனத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து நடந்தே கிரிவீதி வந்து அங்கிருந்து மலைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் நந்தவனத்தில் இருந்து கிரிவீதி வருவதற்கான பாதை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது பழனியில் மழை பெய்து வருவதால் இந்த பாதையானது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே தீர்த்தம் எடுத்து வருவதில் கடும் சிரமம் உள்ளதாக மிராஸ் பண்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பழனி முருகன் கோவிலுக்கு தேவையான அபிஷேக தீர்த்தம் எடுத்து வருவதற்கான நந்தவனம்-கிரிவீதி பாதை சேறும், சகதியுமாக உள்ளது. இதுகுறித்து சிவகிரிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இந்த பாதையை சீரமைக்க கோவில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்நிலையில் நந்தவனத்தில் இருந்து கிரிவீதி வருவதற்கான பாதை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது பழனியில் மழை பெய்து வருவதால் இந்த பாதையானது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே தீர்த்தம் எடுத்து வருவதில் கடும் சிரமம் உள்ளதாக மிராஸ் பண்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பழனி முருகன் கோவிலுக்கு தேவையான அபிஷேக தீர்த்தம் எடுத்து வருவதற்கான நந்தவனம்-கிரிவீதி பாதை சேறும், சகதியுமாக உள்ளது. இதுகுறித்து சிவகிரிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இந்த பாதையை சீரமைக்க கோவில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X