search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன் அபிஷேகம்
    X
    சிவன் அபிஷேகம்

    நொய்யல் சிவன் கோவில்களில் அமுது விழா

    சிவன் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    புன்னம் சத்திரம் புன்னைவன நாதர் கோவிலில் ஆவணி மாதம் மூலநாளையொட்டி புட்டுக்கு மண் சுமந்த அமுது விழா நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிவனுக்கு புட்டு படைத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதேபோல் நத்தமேடு சிவன்கோவிலில் உள்ள புஷ்பவனநாதர், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி கோவிலில் புட்டு அமுது விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×