என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் விருந்து
Byமாலை மலர்15 Aug 2020 9:13 AM GMT (Updated: 15 Aug 2020 9:13 AM GMT)
கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டியில் சுவாமி மதுரைவீரன் சுவாமி ஆடி படையல் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.
கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டியில் மதுரைவீரன் சுவாமி ஆடி படையல் விருந்து நிகழ்ச்சி வருடம் தோறும் ஆடி மாதம் அங்குள்ள மரத்தின் அடியில் கொண்டாடப்படும். இதற்காக கிராமத்தினர் ஏராளமானோர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணமாக சேவல்களை பலி கொடுத்து வணங்குவார்கள்.
இதன்படி இந்த ஆண்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட சேவல்கள் பக்தர்களால் கோவிலுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் அதனை பலி கொடுத்து ஆண்கள் மட்டுமே அதனை சமைத்து மதுரைவீரன் சுவாமிக்கு படைத்தனர். சேவல் கறியுடன் மொச்சைப்பயறு கலந்து சமைக்கப்பட்டது. பெண்களுக்கு இங்கு அனுமதியில்லை. சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை பெண்கள் உண்பதும் கிடையாது.
முழுக்க, முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்று உண்டு ருசித்தனர். இந்த திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர். இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் குறைந்த அளவிலேயே கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஆடி படையல் விழாவை கொண்டாடினர்.
இதன்படி இந்த ஆண்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட சேவல்கள் பக்தர்களால் கோவிலுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் அதனை பலி கொடுத்து ஆண்கள் மட்டுமே அதனை சமைத்து மதுரைவீரன் சுவாமிக்கு படைத்தனர். சேவல் கறியுடன் மொச்சைப்பயறு கலந்து சமைக்கப்பட்டது. பெண்களுக்கு இங்கு அனுமதியில்லை. சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை பெண்கள் உண்பதும் கிடையாது.
முழுக்க, முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்று உண்டு ருசித்தனர். இந்த திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர். இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் குறைந்த அளவிலேயே கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஆடி படையல் விழாவை கொண்டாடினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X