search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு
    X
    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு

    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு

    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் நடந்தது. இதையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
    காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மாங்கனி திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

    மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாணம், பிச்சாண்டவர் வீதியுலா, மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி, புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் நிறைவாக நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது. இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் பிச்சாண்டவர் உள்பட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
    Next Story
    ×