என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சயன கோலத்தில் ஈசன் இருக்கும் தலம்
Byமாலை மலர்11 July 2020 5:06 AM GMT (Updated: 11 July 2020 5:06 AM GMT)
பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் ஈசன், சிவலிங்க வடிவிலேயே காட்சி தருவார். ஆனால் சுருட்டப்பள்ளியில் மனித உருவத்துடன் அம்பாளின் மடியில் தலை சாய்த்தபடி சயன கோலத்தில் காட்சி தருவது அபூர்வமானது.
சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. இந்த ஆலயத்தில் இறைவனின் திருநாமம் பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் திருநாமம் மரகதவல்லி.
திருப்பாற்கடலை கடைந்தபோது, கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷம்தான் வெளிப்பட்டது. உலகை அழிக்கும் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது உடலுக்குள் இறங்காமல் இருக்க, அவரது கழுத்தை அம்பாள் பிடித்தார். இதனால் விஷம் ஈசனின் கழுத்திலேயே நின்றது. விஷத்தின் வீரியத்தால் அம்பாளின் மடியில் மயங்கி விழுந்தார் ஈசன்.
இப்படி அம்பாளின் மடி மீது தலை வைத்தபடி சயன கோலத்தில் ஈசன் இருக்கும் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும். பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் ஈசன், சிவலிங்க வடிவிலேயே காட்சி தருவார். ஆனால் இங்கு மனித உருவத்துடன் அம்பாளின் மடியில் தலை சாய்த்தபடி சயன கோலத்தில் காட்சி தருவது அபூர்வமானது. இந்த மூலவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருப்பாற்கடலை கடைந்தபோது, கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷம்தான் வெளிப்பட்டது. உலகை அழிக்கும் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது உடலுக்குள் இறங்காமல் இருக்க, அவரது கழுத்தை அம்பாள் பிடித்தார். இதனால் விஷம் ஈசனின் கழுத்திலேயே நின்றது. விஷத்தின் வீரியத்தால் அம்பாளின் மடியில் மயங்கி விழுந்தார் ஈசன்.
இப்படி அம்பாளின் மடி மீது தலை வைத்தபடி சயன கோலத்தில் ஈசன் இருக்கும் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும். பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் ஈசன், சிவலிங்க வடிவிலேயே காட்சி தருவார். ஆனால் இங்கு மனித உருவத்துடன் அம்பாளின் மடியில் தலை சாய்த்தபடி சயன கோலத்தில் காட்சி தருவது அபூர்வமானது. இந்த மூலவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X