
இந்த விழாவிற்காக ஐயப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் நேற்று முன்தினம் மாலை அணிவிக்கப்பட்டன. நேற்று காலையில் வேத பாராயணம் நடைபெற்றது. பின்னர் தந்திரி கண்டரரு மோகனரு சிறப்பு பூஜைகள் நடத்தினார். இதைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.
வருகிற 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. மூன்றாம் திருநாள் முதல் ஒன்பதாம் திருநாள் வரை சப்பர வீதி உலாவின் போது கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் அன்னதானம் நடக்கிறது. வருகிற 26-ந் தேதி ஆராட்டு நடக்கிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழக, கேரள பக்தர்கள் கலந்து கொண்டனர்.