என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கார்த்திகை மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Byமாலை மலர்18 Nov 2019 4:52 AM GMT (Updated: 18 Nov 2019 4:52 AM GMT)
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பு மற்றும் வாரவிடுமுறை நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பு மற்றும் வாரவிடுமுறை நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பழனி முருகன் கோவிலில் உள்ள ஆனந்தவிநாயகர் சன்னதியில் சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் ஆனந்த விநாயகர் சன்னதி முன்பு மாலை அணிந்து கொண்டனர். பழனி கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலையில் உள்ள முருகன்கோவிலுக்கு சென்றனர்.
இதேபோல் முருகன்கோவிலில் உள்ள பொது, கட்டளை, கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் ஆனந்த விநாயகர் சன்னதி முன்பு மாலை அணிந்து கொண்டனர். பழனி கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலையில் உள்ள முருகன்கோவிலுக்கு சென்றனர்.
இதேபோல் முருகன்கோவிலில் உள்ள பொது, கட்டளை, கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X