என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முடவன் முழுக்கு பெயர் காரணம்
Byமாலை மலர்16 Nov 2019 8:18 AM GMT (Updated: 16 Nov 2019 8:18 AM GMT)
கடைமுழுக்கு நாளிலும் காவிரியில் நீராட முடியாதவர்கள், கார்த்திகை மாத முதல்நாளில் சூரிய உதயத்திற்கு முன் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நீராடி இறைவனை வழிபடுவதும் சிறப்பான பலனைத் தரும்.
கடைமுழுக்கு நாளிலும் காவிரியில் நீராட முடியாதவர்கள், கார்த்திகை மாத முதல்நாளில் சூரிய உதயத்திற்கு முன் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நீராடி இறைவனை வழிபடுவதும் சிறப்பான பலனைத் தரும். ஒருமுறை துலா நீராடலின் மகத்துவத்தை அறிந்து, தனது பாவத்தினைப் போக்கிக்கொள்ள முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். ஐப்பசி மாதம் முடிவதற்குள் காவிரியின் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நீராடி அம்மையப்பனை வழிபடலாம் என்ற எண்ணத்தில் இருந்த அவன், இங்கு வந்து சேர்ந்தபோது ஐப்பசி மாதம் முடிந்திருந்தது. அன்றைய தினம் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது.
துலாக்கட்டத்திரி நீராட இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டுமே என்றும், தன் இயலாமையை நினைத்தும் வருந்திய அவன், மயூரநாதரிடம் முறையிட்டான். அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன்,அவனுக்காக ஒருநாள் நீட்டிப்பு தந்து “ஐப்பசி மாதத்தில் துலா நீராடிய பெரும்பலனை, கார்த்திகை முதல் நாளிலும் பெறலாம்”என்று அருளினார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த அவன், ‘சிவாயநம’ என்று பஞ்சாட்சரம் உச்சரித்து காவிரியில் மூழ்கி எழுந்தான். ஆம்! அவனது பாவமும், முன்ஜென்ம வினையும், முடமும் நீங்கியது. அதுநாள் முதல் கார்த்திகை முதல் நாளிலும் இங்கு நீராடுவது ஐதீகமாகி விட்டது. அன்றைய தினம் நீராடுவதற்கு ‘முடவன் முழுக்கு’ என்று பெயர்.
துலாக்கட்டத்திரி நீராட இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டுமே என்றும், தன் இயலாமையை நினைத்தும் வருந்திய அவன், மயூரநாதரிடம் முறையிட்டான். அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன்,அவனுக்காக ஒருநாள் நீட்டிப்பு தந்து “ஐப்பசி மாதத்தில் துலா நீராடிய பெரும்பலனை, கார்த்திகை முதல் நாளிலும் பெறலாம்”என்று அருளினார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த அவன், ‘சிவாயநம’ என்று பஞ்சாட்சரம் உச்சரித்து காவிரியில் மூழ்கி எழுந்தான். ஆம்! அவனது பாவமும், முன்ஜென்ம வினையும், முடமும் நீங்கியது. அதுநாள் முதல் கார்த்திகை முதல் நாளிலும் இங்கு நீராடுவது ஐதீகமாகி விட்டது. அன்றைய தினம் நீராடுவதற்கு ‘முடவன் முழுக்கு’ என்று பெயர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X