என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
100 கிலோ பச்சரிசி சாதத்தால் பாடலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
Byமாலை மலர்13 Nov 2019 4:57 AM GMT (Updated: 13 Nov 2019 4:57 AM GMT)
100 கிலோ பச்சரிசி சாதத்தால் பாடலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஐப்பசிமாத பவுர்ணமியையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு 100 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் மூலவர் லிங்கத்தின் மீது சிவபெருமானின் முகம் வரையப்பட்டிருந்தது, பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாவே இருந்தது.
பின்னர் இரவு 10 மணியளவில் அலங்காரம் பிரிக்கப்பட்டு, அன்னத்தை எடுத்து கோவில் முன்புள்ள சிவகர தீர்த்தத்தில் கரைக்கப்பட்டது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பரம்பொருள் இறைவன் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11 மணியளவில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இதில் கடலூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவு 10 மணியளவில் அலங்காரம் பிரிக்கப்பட்டு, அன்னத்தை எடுத்து கோவில் முன்புள்ள சிவகர தீர்த்தத்தில் கரைக்கப்பட்டது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பரம்பொருள் இறைவன் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11 மணியளவில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இதில் கடலூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X