search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு இன்று ஆறாட்டு விழா

    மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடியில் இன்று (புதன்கிழமை) ஆறாட்டு விழா நடக்கிறது.
    மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி கடந்த 28-ந்தேதி விழா தொடங்கி தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 2-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. 10-வது நாள் திருவிழாவான இன்று (புதன்கிழமை) மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடியில் ஆறாட்டு விழா நடைபெறுகிறது.

    இதற்காக மருங்கூரில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு சுப்பிரமணியசாமி வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு, மயிலாடி புத்தனாறு கால்வாயில் உள்ள ஆறாட்டு மடத்தில் எழுந்தருளுகிறார். அதன்பிறகு மாலை 6 மணிக்கு கால்வாய் படித்துறையில் சுப்பிரமணிசாமிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மயிலாடி பேரூராட்சி செயல் அலுவலர் அகஸ்தியலிங்கம் ஆகியோர் செய்துள்ளனர்.

    இதையொட்டி, ஆறாட்டு விழா கலை இலக்கிய பேரவை சார்பில் இலக்கிய விழா கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று காலை 10 மணிக்கு மயிலாடி தொழில் வர்த்தக நல சங்கமும், ஈத்தாமொழி சிவா மருத்துவமனையும்இணைந்து டாக்டர் சிவகுமார் தலைமையில் இலவச மருத்துவமுகாமை நடத்துகிறார்கள். இரவு 7 மணிக்கு ஆன்மிக உரை நடக்கிறது.

    நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் சி.என்.ராஜதுரை கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×