
ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, தினமும் மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மட்டும் படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை ரெங்கநாச்சியார் சேருகிறார்.
ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் 7 நாட்களிலும் மாலை 3 மணி முதல் 5 மணிவரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. மற்ற காலங்களில் வழக்கம்போல சேவை நடைபெறும். மேற்கண்ட தகவல், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.