என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவ திருநாள் 2-ந் தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்24 Oct 2019 6:28 AM GMT (Updated: 24 Oct 2019 6:28 AM GMT)
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவ திருநாள் நவம்பர் 2-ந்தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்கப்பட்டு 8-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த நிகழ்ச்சி, ‘டோலோற்சவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஊஞ்சல் உற்சவ திருநாள் நவம்பர் 2-ந்தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்கப்பட்டு 8-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.
ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, தினமும் மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மட்டும் படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை ரெங்கநாச்சியார் சேருகிறார்.
ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் 7 நாட்களிலும் மாலை 3 மணி முதல் 5 மணிவரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. மற்ற காலங்களில் வழக்கம்போல சேவை நடைபெறும். மேற்கண்ட தகவல், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, தினமும் மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மட்டும் படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை ரெங்கநாச்சியார் சேருகிறார்.
ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் 7 நாட்களிலும் மாலை 3 மணி முதல் 5 மணிவரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. மற்ற காலங்களில் வழக்கம்போல சேவை நடைபெறும். மேற்கண்ட தகவல், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X