search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவை வரதய்யங்கார்பாளையத்தில் அய்யா வைகுண்ட சிவபதி தேர் திருவிழா நடந்தபோது எடுத்த படம்.
    X
    கோவை வரதய்யங்கார்பாளையத்தில் அய்யா வைகுண்ட சிவபதி தேர் திருவிழா நடந்தபோது எடுத்த படம்.

    கோவை வரதய்யங்கார்பாளையத்தில் அய்யா வைகுண்ட சிவபதி தேர் திருவிழா

    கோவை வரதய்யங்கார்பாளையத்தில் நடந்த அய்யா வைகுண்ட சிவபதி தேர் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    கோவை சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் வரதய்யங்கார் பாளையத்தில் அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தேர்த்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக 20-ந் தேதி காலை 8 மணிக்கு அன்னதர்மம், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம், 21-ந் தேதி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, இரவு 7.30 மணிக்கு மயில் வாகனத்தில் எழுந்தருளல், 22-ந் தேதி காலையில் பணிவிடை, உச்சிபடிப்பு அய்யா வைகுண்டர் பிரம்மனாக வெளிப்பட்டு சரஸ்வதி தேவியுடன் அன்ன வாகனத்தில் வருதல், 23-ந் தேதி அய்யா தொட்டில் வாகனத்தில் வீதிவலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    24-ந் தேதி அய்யா வைகுண்டர் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 25-ந் தேதி சர்ப்ப வாகனத்திலும், 26-ந் தேதி கருட வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளைக்குதிரை வாகனத்திலும், 28-ந் தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும், 29-ந் தேதி இந்திர வாகனத்திலும் வீதிவலம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் அம்மையப்பராக எழுந்தருள செய்து தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இதில் சீர்வரிசைகளுடன் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    தேரோட்டத்தை கோவை நாடார் சங்க பொருளாளர் கணேசன், செயலாளர் பொன்.செல்வராஜ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் வேலுமயில், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரகுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. விழா ஏற்பாடுகளைய அய்யா வைகுண்ட சிவபதி கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×