என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தேவநாதசாமி கோவிலில் ஹயக்ரீவர் உற்சவம் தொடங்கியது
Byமாலை மலர்4 Sep 2019 3:25 AM GMT (Updated: 4 Sep 2019 3:25 AM GMT)
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஹயக்ரீவர் உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. கோவிலில் உள்ள அவுசதகிரி மலையில் பிரசித்தி பெற்ற கல்விக்கு உகந்த ஹயக்கிரீவர் சன்னதி அமைந்திருக்கிறது. இதனால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி என்று பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இங்கு ஆண்டு தோறும் ஹயக்ரீவர் உற்சவம் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி ஹயக்ரீவர் உற்சவம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதையொட்டி ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உற்சவத்தில் தினசரி ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவருக்கு சாற்றுமுறை மற்றும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இங்கு ஆண்டு தோறும் ஹயக்ரீவர் உற்சவம் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி ஹயக்ரீவர் உற்சவம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதையொட்டி ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உற்சவத்தில் தினசரி ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவருக்கு சாற்றுமுறை மற்றும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X