search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்
    X
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை தொடங்குகிறது

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மாசி, மார்கழி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை, மார்கழி மாதங்களில் தாணுமாலயசாமிக்கும், ஆவணி மாதத்தில் திருவேங்கட விண்ணவ பெருமாளுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆவணி மாத திருவிழா நாளை (புதன்கிழமை) காலை 7.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 2 அம்பாளும், பெருமாளும் வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    9-ம் திருவிழாவான வருகிற 12-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 2 அம்பாளையும், பெருமாளையும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பர தேரில் எழுந்தருள செய்து ரத வீதியில் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக இழுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு வாகன பவனியும், பள்ளி உணர்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், பெருமாள் பசு கன்றுவின் முகத்தில் எழுந்தருளுதலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில், கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
    Next Story
    ×