என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோவிந்தராஜ் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா இன்று நடக்கிறது
Byமாலை மலர்16 Aug 2019 6:23 AM GMT (Updated: 16 Aug 2019 6:23 AM GMT)
கோவிந்தராஜ் நகரில் உள்ள மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பெங்களூரு கோவிந்தராஜ் நகர் கே.எச்.பி. காலனியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தமிழர்களும், கன்னடர்களும் சேர்ந்து திருவிழா கொண்டாடி வருகிறார்கள். 1969-ம் ஆண்டுக்கு முன்பாக பெங்களூரு கலாசிபாளையம் பகுதியில் வசித்து வந்த தமிழர்களுக்கு, கர்நாடக அரசு சார்பில் 4 இடங்கள் குடியிருப்பதற்கு வழங்கப்பட்டது. இதில் ஒரு பிரிவினர் கோவிந்தராஜ் நகருக்கு வந்து தங்கினார்கள்.
அப்போது அங்கு சிறிய அளவிலான கோவில் எழுப்பப்பட்டு ஆதிபராசக்தியின் அம்சமான மாரியம்மனை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டனர். 1982-ம் ஆண்டில் இந்த கோவிலின் நிர்வாக பொறுப்பிற்கு எம்.ஜி.ஆர். மணி வந்தார். அதன்பிறகு மாரியம்மன் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த கோவிலில் 40-வது ஆண்டு விழா நேற்று (15-ந்தேதி) முதல் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. நேற்று காலை 9 மணிக்கு கங்கா பூஜை மற்றும் கணபதி அலங்காரமும், அம்மன் வீதி உலாவும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும், மாலை 5.30 மணி அளவில் கரகம் மற்றும் தீமிதி விழாவும் நடக்கிறது.
இதையடுத்து வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) வெங்கடேசுவர சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. அதன்பின்னர் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சாந்தி பூஜையும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். மணி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
அப்போது அங்கு சிறிய அளவிலான கோவில் எழுப்பப்பட்டு ஆதிபராசக்தியின் அம்சமான மாரியம்மனை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டனர். 1982-ம் ஆண்டில் இந்த கோவிலின் நிர்வாக பொறுப்பிற்கு எம்.ஜி.ஆர். மணி வந்தார். அதன்பிறகு மாரியம்மன் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த கோவிலில் 40-வது ஆண்டு விழா நேற்று (15-ந்தேதி) முதல் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. நேற்று காலை 9 மணிக்கு கங்கா பூஜை மற்றும் கணபதி அலங்காரமும், அம்மன் வீதி உலாவும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும், மாலை 5.30 மணி அளவில் கரகம் மற்றும் தீமிதி விழாவும் நடக்கிறது.
இதையடுத்து வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) வெங்கடேசுவர சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. அதன்பின்னர் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சாந்தி பூஜையும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். மணி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X