search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழாவுக்கு தயாராகி வரும் தேர்கள்
    X
    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழாவுக்கு தயாராகி வரும் தேர்கள்

    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழாவுக்கு தயாராகி வரும் தேர்கள்

    நெல்லையப்பர் கோவில் நாளை தொடங்க உள்ள ஆனித்தேர் திருவிழாவை முன்னிட்டு 5 தேர்களும் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனித்தேர் திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி டவுன் கீழ ரதவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 5 தேர்களும் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர்களை சுற்றி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தட்டிகள் அகற்றப்பட்டு, கம்புகள் கட்டப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் விநாயகர், சுப்பிரமணியர் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர் தேர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.
    Next Story
    ×