என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அத்தி வரதர் மீண்டும் 2059-ம் ஆண்டு தான் காட்சி தருவார்
Byமாலை மலர்1 July 2019 8:07 AM GMT (Updated: 1 July 2019 8:07 AM GMT)
இன்று முதல் காட்சி தரும் அத்தி வரதர் ஆகஸ்டு 17-ந்தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அடுத்து 2059-ம் ஆண்டு தான் மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தர வருவார்.
வசந்த மண்டபத்தில் இருந்து இன்று முதல் காட்சி தரும் ஆதி அத்தி வரதர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்பிறகு, பரிகார பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் நீருக்கடியில் வைக்கப்படுவார். அடுத்து 2059-ம் ஆண்டு தான் மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தர வருவார்.
இதற்கு முன்பு 1854-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி, 1892-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி, 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் ஆதி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் 40 ஆண்டுகள் இடைவெளி என்பது சரியாக பின்பற்றப்படவில்லை.
1937-ம் ஆண்டுக்கு பிறகு 1977-ம் ஆண்டு ஆதி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில், கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்துள்ளது. எனவே, அந்தப் பணி முடிந்ததும் 1978-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, 1979-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி தான் (அதாவது 42 ஆண்டுகள் கழித்து) ஆதி அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். தற்போது, சரியாக 40 ஆண்டுகளில் மீண்டும் அவர் வெளியே வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 1854-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி, 1892-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி, 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் ஆதி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் 40 ஆண்டுகள் இடைவெளி என்பது சரியாக பின்பற்றப்படவில்லை.
1937-ம் ஆண்டுக்கு பிறகு 1977-ம் ஆண்டு ஆதி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில், கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்துள்ளது. எனவே, அந்தப் பணி முடிந்ததும் 1978-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, 1979-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி தான் (அதாவது 42 ஆண்டுகள் கழித்து) ஆதி அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். தற்போது, சரியாக 40 ஆண்டுகளில் மீண்டும் அவர் வெளியே வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X