என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கைலாசநாதர் கோவிலில் சுவாமி-அம்பாள் வீதிஉலா
Byமாலை மலர்12 Jun 2019 6:03 AM GMT (Updated: 12 Jun 2019 6:03 AM GMT)
நெல்லை கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் கைலாசநாதர்-சவுந்திரவள்ளி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி-அம்பாள் வீதி உலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையும், கைலாசநாதர்-சவுந்திரவள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. காலை 8 மணிக்கு சுவாமி-அம்மாள், அஸ்திரதேவர் மேளதாளம் முழங்க கோவிலில் இருந்து தாமிரபரணி ஆற்றின் தைப்பூச மண்டப படித்துறைக்கு எழுந்தருளினர். அங்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரியும் நடந்தது.
இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு கைலாசநாதர்-சவுந்திரவள்ளி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் கொடியிறக்கம் நடந்தது.
விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி-அம்பாள் வீதி உலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையும், கைலாசநாதர்-சவுந்திரவள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. காலை 8 மணிக்கு சுவாமி-அம்மாள், அஸ்திரதேவர் மேளதாளம் முழங்க கோவிலில் இருந்து தாமிரபரணி ஆற்றின் தைப்பூச மண்டப படித்துறைக்கு எழுந்தருளினர். அங்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரியும் நடந்தது.
இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு கைலாசநாதர்-சவுந்திரவள்ளி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் கொடியிறக்கம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X