search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி
    X

    ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி பூப்பந்தல் மண்டபத்தில் நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி பூப்பந்தல் மண்டபத்தில் நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு நம்மாழ்வார் முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து நவதிருப்பதி பெருமாள்கள் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினவேந்தன், இரட்டை திருப்பதி தேவர்பிரான் செந்தாமரை கண்ணன், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில்வண் ணன், திருக்கோளூர் நிக்சோபவித்தன், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மதுரகவியாழ்வார் ஆகியோர் பூப்பந்தல் மண்டபத்திற்கு வந்த பின்னர் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது.

    அதன்பின்னர் இரவு 10 மணிக்கு ஒன்பது பெருமாள்களும் புஷ்பஅலங்காரத்துடன் கருடவாகனத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வீதிஉலா சென்று பக்தர் களுக்கு காட்சி அளித்தனர்.
    Next Story
    ×