search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
    X

    ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோவில், நவதிருப்பதி தலங்களில் 9-வது கோவில் ஆகும். இந்த கோவிலில் நம்மாழ்வார் அவதாரத்தை குறிக்கும் வகையில் வைகாசி அவதார திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலையில் தினமும் நம்மாழ்வார் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் நம்மாழ்வாருக்கு மங்களா சாசனம் நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் இருந்து பெருமாள்கள் கருட சேவையும் நடக்கும். 14-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 15-ந்தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×