என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி
Byமாலை மலர்22 March 2019 4:49 AM GMT (Updated: 22 March 2019 4:49 AM GMT)
பங்குனி உத்திர விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
கும்பகோணம் நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடிஸ்வரர் சாமி கோவில்களில் கடந்த 12-ந் தேதி பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
இதையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் பலவித வாகனங்களில் சாமி, அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழி பாடுகள் தொடங்கியது.
பின்னர் விநாயகர், சுப்ரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் சமேத நாகேஸ்வரர் மற்றும் அனந்தநிதியம்பிகை சமேத கம்பட்டவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவாக மகாமக குளத்தை வந்தடைந்தனர்.
பின்னர் பகல் 12 மணியளவில் மகாமக குளக்கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.இதே போல் கொட்டையூரில் உள்ள கோடிஸ்வரர் கோவிலிலும் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
இதையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் பலவித வாகனங்களில் சாமி, அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழி பாடுகள் தொடங்கியது.
பின்னர் விநாயகர், சுப்ரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் சமேத நாகேஸ்வரர் மற்றும் அனந்தநிதியம்பிகை சமேத கம்பட்டவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவாக மகாமக குளத்தை வந்தடைந்தனர்.
பின்னர் பகல் 12 மணியளவில் மகாமக குளக்கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.இதே போல் கொட்டையூரில் உள்ள கோடிஸ்வரர் கோவிலிலும் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X