search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி
    X

    கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி

    பங்குனி உத்திர விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
    கும்பகோணம் நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடிஸ்வரர் சாமி கோவில்களில் கடந்த 12-ந் தேதி பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    இதையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் பலவித வாகனங்களில் சாமி, அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழி பாடுகள் தொடங்கியது.

    பின்னர் விநாயகர், சுப்ரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் சமேத நாகேஸ்வரர் மற்றும் அனந்தநிதியம்பிகை சமேத கம்பட்டவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவாக மகாமக குளத்தை வந்தடைந்தனர்.

    பின்னர் பகல் 12 மணியளவில் மகாமக குளக்கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.இதே போல் கொட்டையூரில் உள்ள கோடிஸ்வரர் கோவிலிலும் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
    Next Story
    ×