search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பண்ணாரியம்மன் கோவி்ல் குண்டம் விழாவையொட்டி அம்மன் சப்பரம்
    X

    பண்ணாரியம்மன் கோவி்ல் குண்டம் விழாவையொட்டி அம்மன் சப்பரம்

    ஈரோடு மாவட்டத்தில் புகழ் மிக்க பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீதி உலா வந்தது.
    ஈரோடு மாவட்டத்தில் புகழ் மிக்க பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடந்து வருகிறது.

    இதே போல் இந்தாண்டு கடந்த மாதம் 19-ந்தேதி குண்டம் விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீதி உலா வந்தது.

    கடந்த 2 நாட்களாக அம்மன் சப்பரம் சத்திய மங்கலத்தில் திரு வீதி உலா வந்தது.

    நேற்று மாலை கோட்டு வீராம்பாளையத்தில் உள்ள சவுண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சப்பரம் இறக்கி வைக்கப்பட்டது. இன்று காலை அருகே உள்ள பால முருகன் கோவில் சென்று அங்கிருந்து பசுவபாளையம், கொத்தமங்கலம், ராஜன் நகர், வட வள்ளி, புதுபீர் கடவு வழியாக சென்று இன்று நள்ளிரவு 12 மணி அளவில் பண்ணாரியம்மன் கோவிலை சென்றடைகிறது.

    இதை தொடர்ந்து குழி கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு அம்மன் புகழ் பாடும் நிகழ்ச்சி தொடங்குகிறது. மலைவாழ் மக்கள் தாரை-தப்படை, வாத்தியங்களுடன் களியாட் டமாடி அம்மன் புகழ் பாடு கிறார்கள். வரும் 19-ந் தேதி பக்தர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கும் குண்டம் விழா நடக்கிறது. இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கு கிறார்கள்.

    தமிழ்நாடு மட்டுமில் லாமல் கர்நாடகா மாநில பக்தர்களும் ஏராளமான பேர் கலந்து கொள்கிறார்கள். 
    Next Story
    ×