search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
    X

    இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது

    சமயபுரம் அருகே, இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலின் திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சமயபுரம் அருகே, இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 6 மணிக்கு மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    இரவு 7 மணிக்கு உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், யானை, ரிஷபம், அன்னம், குதிரை போன்ற வாகனங்களில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் மாதம் 3-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. 
    Next Story
    ×