search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு 27-ந் தேதி கும்பாபிஷேகம்
    X

    கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு 27-ந் தேதி கும்பாபிஷேகம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. அதன்படி வருகிற 23-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை யாகசாலை பூஜை, பஞ்சகவ்யம், ரட்சாபந்தனம், அக்னிபிரதிஷ்டை, கும்ப பாராயணம், பூர்ணாஹூதி உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    22-ந் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ந் தேதி காலை 4 மணிமுதல் 7 மணிவரை சுப்ரபாதம் நடக்கிறது. பின்னர் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வருகின்றனர்.

    இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×