என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரியில் திருப்பதி கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
Byமாலை மலர்8 Dec 2018 6:36 AM GMT (Updated: 8 Dec 2018 6:36 AM GMT)
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிகிறது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. 5½ ஏக்கர் பரப்பில் ரூ.22 கோடியே 50 லட்சம் செலவில் பிரம்மாண்டமாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமான பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது.
தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சங்கால் தலைமையிலான குழுவினர் இந்த கோவிலை ஆய்வு செய்தனர். பின்னர் அடுத்த மாதம் (ஜனவரி) கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கூறினர். தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் அமைக்க கொடிமரம், சாமி சிலைகள் தயாராகவே உள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் உள்ளது போலவே இங்கு தேரோடும் 4 மாட வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தனி அதிகாரியாக சென்னையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உதவி செயல் அலுவலர் ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், கோவிலுக்கு முதல் கட்டமாக 8 அர்ச்சகர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்து உள்ளது.
தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சங்கால் தலைமையிலான குழுவினர் இந்த கோவிலை ஆய்வு செய்தனர். பின்னர் அடுத்த மாதம் (ஜனவரி) கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கூறினர். தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் அமைக்க கொடிமரம், சாமி சிலைகள் தயாராகவே உள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் உள்ளது போலவே இங்கு தேரோடும் 4 மாட வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தனி அதிகாரியாக சென்னையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உதவி செயல் அலுவலர் ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், கோவிலுக்கு முதல் கட்டமாக 8 அர்ச்சகர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X