search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆபத்தான சங்கு தீர்த்தம்
    X

    ஆபத்தான சங்கு தீர்த்தம்

    தாமிரபரணியின் நிறைவாக இருக்கும் சங்கு தீர்த்தம் பகுதியில் பல புதை குழிகள் இருப்பதாலும், முறையான பாதைகள் இல்லாத காரணத்தினாலும் பெரும்பாலும் படகில் தான் தீர்த்தம் எடுக்கச் செல்கிறார்கள்.
    தாமிரபரணியின் நிறைவாக இருக்கும் சங்கு தீர்த்தம் பகுதியில் பல புதை குழிகள் இருப்பதாலும், முறையான பாதைகள் இல்லாத காரணத்தினாலும் பெரும்பாலும் படகில் தான் தீர்த்தம் எடுக்கச் செல்கிறார்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் நூற்றுக்கணக்கான கோவில்களுக்கு இங்கிருந்து தீர்த்தம் எடுக்கிறார்கள்.

    தீர்த்தம் எடுக்க போகும்போது ஆற்று தண்ணீர் வற்றி இருக்கும். தீர்த்தம் எடுத்து விட்டு வரும்போது தண்ணீர் ஆள் மூழ்கும் அளவுக்கு உயர்ந்து விடும். ஆகவே பெரும்பாலான பக்தர்கள் இங்குள்ள படகோட்டிகள் மூலமாகத்தான் சங்கு முகம் செல்கிறார்கள். பழைய காயல் வழியாக செல்ல இதற்காக படகோட்டிகள் பலர் உள்ளனர். புன்னகாயல் வழியாகவும் செல்லலாம். 2 கிலோ மீட்டர் தொலைவில் தான் சங்கு முகம் உள்ளது. ஆனால் யாரும் அதிகமாக செல்வதில்லை.
    சங்கு முகத்தில் இரண்டு இடத்தில் தாமிரபரணி வங்க கடலுடன் சேருகிறது.

    Next Story
    ×