search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணரின் வியூகம்
    X

    கிருஷ்ணரின் வியூகம்

    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் உருவான சூழ்நிலையில் பாண்டவர்களின் சார்பில் கிருஷ்ணர் கவுரவர்களிடம் தூது சென்றார். அப்போது கிருஷ்ணன் அமைத்த வியூகம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் உருவான சூழ்நிலையில் பாண்டவர்களின் சார்பில் கிருஷ்ணர் கவுரவர்களிடம் தூது சென்றார். ஆனால் அவர் கவுரவர்களின் அரண்மனைக்குச் செல்லாமல், அவர்களது சித்தப்பாவான விதுரரின் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவர் விருந்துண்டார்.

    இதனால் துரியோதனனுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. முதலில் தங்களைத் தேடி வராத கிருஷ்ணரை அவமதிக்க முடி வெடுத்தான். அவையில் இருந்தவர்களிடம், “யாரும் கிருஷ்ணர் வரும்போது எழுந்திருக்கக் கூடாது. அவரை அவமதிக்க வேண்டும்” என்று துரியோதனன் கட்டளையிட்டான். ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தேஜஸில் மயங்கி அனைவரும் தங்களையும் அறியாமலேயே இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர்.

    துரியோதனன் மட்டும் ஏளனத்துடன், “கிருஷ்ணா! நீர் தூது வந்ததன் நோக்கம் என்ன?” என்று கேட்டான். வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டை கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர். ஆனால், துரியோதனனோ ஒருபிடி மண்கூட கிடையாது என்று மறுத்துவிட்டான்.

    நல்லவரான விதுரர் மட்டும் துரியோதனனிடம் தர்மத்தை எடுத்துச் சொன்னார். ஆனால் விதுரரின் பிறப்பைப் பற்றி பேசி, துரியோதனன் அவமதித்தான். “தர்மத்தின் பக்கம் தான் நிற்பேன் என்னுடைய வில்லைக் கொண்டு அதர்மத்திற்கு உதவ எனக்கு மனமில்லை” என்று சொல்லி, அவர் தன் வில்லை முறித்து விட்டார்.

    நல்லவரான விதுரர், செஞ்சோற்றுக் கடனுக்காக துரியோதனுக்கு உதவினால், பாண்டவர்களால் அந்த பாரதப் போரில் வெல்ல முடியாது என்ற நிலை இருந்தது. இதை கிருஷ்ணர் நன்கு அறிந்திருந்தார். எனவே கவுரவர்களிடம் இருந்து விதுரரைப் பிரிக்க கிருஷ்ணர் முடிவு செய்தார். அதற்கு ஒரு வியூகம் வகுத்தார். அந்த வியூகத்தின்படிதான் அவர் முதலில் விதுரர் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டார். இதனால் துரியோதனனுக்கும், விதுரருக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்தே விதுரர் தனது கையாலேயே முக்கியமான ஒரு வில்லை ஒடித்தார். கிருஷ்ணரின் வியூகத்திற்கு வெற்றி கிடைத்தது.
    Next Story
    ×