என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்1 Aug 2018 3:17 AM GMT (Updated: 1 Aug 2018 3:17 AM GMT)
தஞ்சையை அடுத்து உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை அடுத்து உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தஞ்சை மட்டும் அல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இதனால் அந்த நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 14-ம் ஆண்டாக 1008 திருவிளக்குபூஜை நேற்று நடைபெற்றது.
இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜைக்குரிய பொருட்கள் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை கவுரவ தலைவர் கிருஷ்ணசாமிவாண்டையார் தலைமை தாங்கினார். இதில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே கலந்துகொண்டார்.
இதற்கான ஏற்பாடுகளை செயல் தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் வேலுசாமி, பொருளாளர் துரைராஜன், ராமகிருஷ்ணன், முருகன், பிரபு, சிவாஜிகணேசன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதனால் அந்த நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 14-ம் ஆண்டாக 1008 திருவிளக்குபூஜை நேற்று நடைபெற்றது.
இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜைக்குரிய பொருட்கள் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை கவுரவ தலைவர் கிருஷ்ணசாமிவாண்டையார் தலைமை தாங்கினார். இதில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே கலந்துகொண்டார்.
இதற்கான ஏற்பாடுகளை செயல் தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் வேலுசாமி, பொருளாளர் துரைராஜன், ராமகிருஷ்ணன், முருகன், பிரபு, சிவாஜிகணேசன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X