search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

    ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில். காவிரி வடகரையில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பாடப்பெற்ற 61-வது திருத்தலமாகும். சிவபெருமான் அப்பர் பெருமானாகிய திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான் எமதர்ம ராஜனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும், மீண்டும் வழங்கியதும், தேவலோக சப்த கன்னிகள் என்றும் அழியாத வரம் பெற்று கல் வாழைகளாக அவதரித்து ஆண், பெண் இருபாலரின் சகல தோஷங்களை நிவர்த்தி செய்து அவர்கள் எண்ணிய வரம் அளித்து அருள்புரிந்து வருவதான சிறப்பு பெற்ற இக்கோவில் கி.பி.6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதான கோவிலாகும்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் ஆடிபூரத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆகஸ்டு 13-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு நேற்று கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தின் முன்பு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் அனைத்து கிராம பட்டயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பா.ராணி மேற்பார்வையில் செயல் அலுவலர் ஹேமலதா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×