என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது](https://img.maalaimalar.com/Articles/2017/Jun/201706010952003607_srirangam-ranganathar-temple-namperumal-vasantha-urchavam-on_SECVPF.gif)
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது
By
மாலை மலர்1 Jun 2017 4:21 AM GMT (Updated: 1 Jun 2017 4:22 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, வருகிற 9-ந் தேதி வரை நம்பெருமாள் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் போது தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபம் சென்றடைவார்.
இதையொட்டி கோவில் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நேநீர் நிரப்பப்பட்டது. இந்த அழகிய மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார். வசந்த மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி இருக்கும் போது மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்பப்படும்.
![](http://img.maalaimalar.com/InlineImage/201706010952003607_srirangam-ranganathar._L_styvpf.gif)
9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 7-ம் நாளான்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுவதும், 9-ம் நாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வதும், தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருள்வதும் சிறப்பம்சமாகும்.
மேலும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும். 7-ந் தேதி தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை விஸ்வரூப சேவையும், காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரையும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அதிகாரி ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையொட்டி கோவில் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நேநீர் நிரப்பப்பட்டது. இந்த அழகிய மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார். வசந்த மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி இருக்கும் போது மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்பப்படும்.
![](http://img.maalaimalar.com/InlineImage/201706010952003607_srirangam-ranganathar._L_styvpf.gif)
9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 7-ம் நாளான்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுவதும், 9-ம் நாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வதும், தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருள்வதும் சிறப்பம்சமாகும்.
மேலும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும். 7-ந் தேதி தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை விஸ்வரூப சேவையும், காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரையும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அதிகாரி ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)