search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் - துப்பாக்கி லைசன்ஸ் வழங்கிய போலீஸ்?
    X

    சல்மான் கான்

    சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் - துப்பாக்கி லைசன்ஸ் வழங்கிய போலீஸ்?

    • இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான்
    • துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு நடிகர் சல்மான்கான் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான் கான். இவர் சில தினங்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திடீரென சென்று போலீஸ் கமிஷனர் பன்சால்கரை சந்தித்தார். கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு விண்ணப்பித்தார்.


    சல்மான் கான்

    சமீபத்தில் பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பஞ்சாப் தாதாவான பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் என கூறப்பட்டு இருந்தது.


    சல்மான் கான்

    இதையடுத்து நடிகர் சல்மான் கான் தான் வழக்கமாக பயன்படுத்தும் காரை குண்டுகள் துளைக்காதவாறு புல்லட் ப்ரூப் கண்ணாடிகளைக் கொண்டு பொறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், நடிகர் சல்மான்கானுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து தற்காத்து கொள்ள அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×