search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நாங்கள் ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. சூர்யா குறித்து சச்சின் பதில்
    X

    சூர்யா -சச்சின் டெண்டுல்கர்

    நாங்கள் ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. சூர்யா குறித்து சச்சின் பதில்

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.
    • இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 'கங்குவா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சச்சின் டெண்டுல்கர் -சூர்யா

    சமீபத்தில் சூர்யா மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரன் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் கேள்விக்கு தனது இணையப் பக்கத்தில் பதிலளித்து வருகிறார்.

    அதில், ரசிகர் ஒருவர் சூர்யா, சச்சினை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து இது குறித்து சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, "நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக இருந்தோம், ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் இறுதியில் இருவரும் நன்றாக பேசிக்கொண்டோம்"என்று சச்சின் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    Next Story
    ×